குருதிக் காட்சிகளும் குற்றச் சமூகமும் - கணேஷ் சுப்ரமணி

'வாட்ஸ் அப்' எனும் விசித்திர பூதம் தொடர்ந்து காட்சிகளைத் துப்புகிறது. குருதி படிந்த சில காணொளிக் காட்சிகள் சிந்தனையை உறையச் செய்கின்றன. கைகள் கட்டப்பட்ட ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்து தலையைத் துண்டிக்கும் காட்சி, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நிறைந்த சாலை நடுவில் சிறை பிடிக்கப்பட்ட ஒருவரின் தலையைத் துண்டிக்கும் காட்சி, ஓர் இளம் பெண்ணை 'ஒழுக்க சீலர்கள்' பலர் சேர்ந்து பொது இடத்தில் கடுமையாகத் தாக்கி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தும் காட்சி, மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் ஏற முயலும் ஒருவரை ரயில் நசுக்கிச் சிதறடிக்கும் காட்சி என நீளும் பட்டியலை எழுதவே கைகள் நடுங்குகின்றன. ஆனால் இக்காட்சிகள், வாட்ஸ் அப்பில் விழித்து, வாட்ஸ் அப்பில் வாழ்ந்து, வாட்ஸ் அப்பிலேயே தூங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் செல்போன்களில் நிறைந்து கிடக்கின்றன.

ஆசிரியம் - கணேஷ் சுப்ரமணி

மாவீரன் அலெக்ஸாண்டருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் அவன் அளவுக்கு அதிகமாகவே வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தான். அதைக் கண்ட அனைவருக்கும் பெரும் வியப்பு. அவனிடம் கேட்டார்கள். 'இவ்வளவு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கு என்ன காரணம்? தந்øதாயானதில் உண்டாகும் இயல்பான உணர்வெழுச்சியா? இந்தப் பூமிக்கு மீண்டும் ஒரு மாவீரன் பிறந்து விட்டான் என்றா? நீ மிச்சம் வைத்த நாடுகளையும் வெற்றி கொள்ள ஒரு பேரரசன் பிறந்து விட்டான் என்றா?' என்றெல்லாம். அலெக்ஸாண்டர் சொன்னான்: 

இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 2 - கணேஷ் சுப்ரமணி

பாரதிதாசனின் இதழியல்
பாரதிதாசனின் இதழியல் என்பது பாரதியில் இருந்தே தொடங்குகிறது. பாரதியின் கலகக் குரல், துணிவு, தீவிரம், போர்க்குணம் ஆகிய அனைத்தும் பாரதிதாசனின் இதழ்ப் பணிகளிலும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது; ஆனால் வேறுபட்ட சித்தாந்தத் தளங்களில். பாரதிதாசனின் தொடக்க காலப் பாடல்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுப் பாடல்களாக இருந்ததால், இதழ்களில் அவற்றைத் தனது சொந்தப் பெயரில் வெளியிட அவரால் இயலவில்லை.

பாற்கடல் - கணேஷ் சுப்ரமணி

பெருங்கடலின்
சிற்றலைப் பரப்பில்
மீன் குஞ்சு தேடும்
தனிப்பறவை
நான்

இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 1 - கணேஷ் சுப்ரமணி

மகாகவி பாரதியார், புரட்சிக்கவி பாரதிதாசன் இருவரும் தமிழின் தனிப்பெரும் கவிஞர்கள் என்பதில் ஐயமேதும் இருப்பதில்லை. ஆனால் இருவரும் இந்தியத் தேசியம் து திராவிடத் தேசியம், ஆரியம் து திராவிடம், சமஸ்கிருத அபிமானம் து சமஸ்கிருத எதிர்ப்பு, கடவுள் ஏற்பு து கடவுள் மறுப்பு என்று முரண்பட்ட சித்தாந்தங்களின் அடையாளங்களாகச் சுட்டப்படுபவர்கள்.

ஜே.கே. எனும் மனிதனின் வாழ்க்கை - கணேஷ் சுப்ரமணி



'உங்களுக்கெல்லாம் தமிழைத் தெரியும்; ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும்' என்று ஜெயகாந்தன் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அவருடைய படைப்புகளைப் போலவே இந்தச் செருக்கும் அவருடைய அடையாளமாக இறுதிக் காலம் வரை இருந்தது.

கார்ப்பரேட் இந்தியாவில் கல்வி - கணேஷ் சுப்ரமணி

'கற்க கடன்வாங்கி கற்பவை கற்றபின்
விற்க நல்ல விலைக்கு'
இந்த அரைகுறை வெண்பாவைப் போலத்தான் இருக்கிறது இந்தியாவில் கல்வி. கல்விக்குக் கடன் கொடுக்க எல்லா வங்கிகளும் போட்டி போடுகின்றன. அப்படி கடன் கொடுத்து வழங்கப்படும் கல்வி யாருக்கானது?

தமிழ்ப் புத்தாண்டு அரசியல் - கணேஷ் சுப்ரமணி

எதிர்பார்த்ததைப் போலவே தமிழ்ப்புத்தாண்டு மீண்டும் சித்திரை முதல்நாளுக்கு மாறியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் சித்திரை முதல் நாள் ‘கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு’ வந்த தமிழ்ப் புத்தாண்டு நாள்

பொக்கிஷத்தை மூடி விட்ட இறைவன் - கணேஷ் சுப்ரமணி

தமிழ் இசை உலகில் ஏராளமான ஆண் குரல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் ஆண்மைக் குரல்கள் அபூர்வம். திரையிசையில் சி.எஸ். ஜெயராமனின் குரலுக்கு அடுத்து ஒலித்த ஆண்மைக் குரலாக நாகூர் ஹனிபாவைச் சொல்லலாம். அந்த ஆண்மைக் குரல் தற்போது அடங்கியிருக்கிறது.

விழுங்கும் திரை - கணேஷ் சுப்ரமணி


டிக்கெட் கிழித்து உள்ளே சென்றதும்
அனைத்தையும் விழுங்கும்
திரை

தமிழ்நாட்டை விழுங்கிய
திரையரங்கின் இருள்

பெண்களுக்குத் தனிக்கல்லூரி தேவையில்லை - கல்யாணி

கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாம் பகுதி

கே: டியூசன் எடுப்பதைப் பற்றி சொல்லுங்கள்.

தனியார் கல்வி தரமானதல்ல - கல்யாணி


கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் இரண்டாம் பகுதி

கே: மெட்ரிக் பள்ளிகளில் படித்தால் மட்டுமே வளர்ச்சியடைய முடியும் என்ற நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையை அடைய தனியார் பள்ளிகள் என்னவெல்லாம் செய்தார்கள்?

தரமற்ற கல்வியின் அடையாளம் ஆங்கிலக்கல்வி - கல்யாணி


கல்வியாளர் கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடல்

கே: மாற்றுக் கல்வி குறித்த உங்களின் செயல்பாடுகள் எப்படித் தொடங்கின?

ஏதோ ஒன்று - கணேஷ் சுப்ரமணி

நாலாம் தெரு ஜோதிமணியின் 
சாவுக்குப் போயிருந்தபோது
அவளைப் பார்க்க முடிந்தது.
பேச முடியவில்லை.

மூக்கைச் சீந்தி அழுத முகத்தையே
உற்றுப் பார்த்தேன்.
அவளும் பார்த்தாள் அவ்வப்போது.

பத்மநாபசுவாமி கோயில்: மன்னர் கால சுவிஸ் வங்கி - கணேஷ் சுப்ரமணி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.

இந்தியப் பெண் - கணேஷ் சுப்ரமணி


இந்தியா
அற்றை நாளில்
இது ஆண்களின் தேசம்.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
கணவன் செத்ததும் மனைவியைத்
தீயில் தள்ளிச் சுட்டெரித்த தேசம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் மரணம் - கணேஷ் சுப்ரமணி


கல்லறை அழைக்கும் 
கடைசிக் காலத்தில்
ஒவ்வொரு மனிதனும்
திரும்பிச் செல்ல ஏங்கும்

இடங்கள் இரண்டு.

எங்கள் வீடு - கணேஷ் சுப்ரமணி

முன்பு எங்கள் வீட்டில்
நிறைய பேர் இருந்தார்கள்
தாத்தா, பாட்டி,
அப்பா, அம்மா,
சித்தி, சித்தப்பா,
பெரியம்மா, பெரியப்பா,
அண்ணன், அக்கா..,

அர்த்தங்கள் - கணேஷ் சுப்ரமணி


ஆண்கள்
இரட்டை அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.

பெண்கள்
இரண்டாயிரம் அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.

திசைமாறிய இசைப்புயல் - கணேஷ் சுப்ரமணி


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்த போதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு முறை நிகழ்ந்து மறையும் அதிசயம் (one time wonder) என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

காதல் - கணேஷ் சுப்ரமணி

கேட்ட மாத்திரத்தில்
மனிதனை மயக்கும்
மந்திர வார்த்தை 
காதல்.

காதலைப் பாடாத கவிஞனும் இல்லை

காதலி தேடாத இளைஞனும் இல்லை.

தி.ஜானகிராமன் நாவல்களில் தற்கொலை - கணேஷ் சுப்ரமணி


தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் உளவியல் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டாலும், சமூகப் பின்புலத்தைப் புறக்கணித்துவிட்டு இப்பிரச்சினையின் ஆழத்தைக் கண்டுவிட முடியாது. ஒரு மனிதனின் உளவியலை அவன் சார்ந்த சமூகப் பின்னணியுடன் விவரிப்பதில் முன்நிற்கும் இலக்கிய வடிவம் நாவல். க்தமிழ்ப் படைப்புலகில் தனிமனித உளவியற் கூறுகளைத் தம் நாவல்களில் சித்திரத்த எழுத்தாளர்களுள் தனித்துவம் பெற்றவராக அடையாளம் காணப்படுபவர் தி.ஜானகிராமன். அவருடைய நாவல்களில் புலனாகும் தற்கொலை நிகழ்வுகளை அவற்றின் உளவியற் பின்னணியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

தில்சன் - திராணியற்ற சமூகம் - கணேஷ் சுப்ரமணி

அப்பாவித் தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்படுவது இலங்கையில்தான் நடந்து வந்தது. தற்போது அந்த பாணியைத் தமிழ்நாட்டிலும் நிகழ்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது இந்திய ராணுவம். இலங்கையில் நடந்ததை வேடிக்கை பார்த்தது போல் தற்போதும் மவுனமாய் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவக் குடியிருப்பில் வாதாம் பழக்கொட்டைகளைப் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார் ஓர் இந்திய ராணுவ அதிகாரி.

ஆன்டிலியா - மோசடி நிலத்தில் எழுந்த மாளிகை - கணேஷ் சுப்ரமணி

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் கனவு மாளிகையான ஆன்டிலியா தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் செலவில் கட்டப்பட்டதாகப் பெருமையடித்துக் கொண்டு முகேஷ் அம்பானி கட்டிய வீட்டின் பெயர்தான் ஆன்டிலியா. ஆன்டிலியா என்றால் மர்மத் தீவு என்று அர்த்தமாம். அதிகார வர்க்கத்தின் அந்தப்புரங்கள் எல்லாமே மர்மம் நிறைந்த தீவுகள்தான்.

உலகத் தமிழன் - கணேஷ் சுப்ரமணி

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்தின்
தனிப்பெருங் கூட்டம் - இன்று
தனித்துப் போன கூட்டம்.

அற்றைத் தமிழன்
கங்கை கொண்டான்;
கடாரம் வென்றான்;
கடல் பிறகோட்டி காலம் வென்றான்.
ஆனால் இற்றைத் தமிழன்..?

சுமை - கணேஷ் சுப்ரமணி

புத்தகங்களை கொஞ்சமாய்
கொண்டு வரக்கூடாதா?
அவற்றை சுமக்கும்
என் இதயம் பாவமில்லையா?

தடங்கள் - கணேஷ் சுப்ரமணி

என் இதயத்தின் மேல்
சில காலடி தடங்கள்.
அவை
உன்னுடையவை.

பொங்கல் எனும் பண்பாடு - கணேஷ் சுப்ரமணி

நீண்ட காலமாகத் தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருவது பொங்கல். இவ்விழா தமிழ்ப்பண்பாட்டுடன் இணைந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பொங்கல் விழாவின் பண்பாட்டுக் கூறுகளை விளங்கிக் கொள்வதற்கு தமிழர்களின் சமூக வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியம்.

முகம் - கணேஷ் சுப்ரமணி

உன்னிடம் ரோஜாவை கொடுத்தேன்.
வாங்க மறுத்தாய்.
ரோஜா வாடியது.
என் முகம் போல.!

நினைவு

என் பேனாவில்
மைதானே ஊற்றினேன்.
நினைவுகளை எப்படி
கொட்டுகிறது?