கருப்புப் பணமும் வெள்ளித் திரையும்

சுவிஸ் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களுடைய
பணத்தின் மதிப்பு இருபத்தைந்து லட்சம் முதல் எழுபத்தைந்து லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் பத்து கோடி வரை ஒதுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்களுக்கே தெரியும்; அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்பதும், கொண்டு வர மாட்டார்கள் என்பதும்.

கர்னாடகா: மூன்றாவது சோதனைக் களம்

“முதலில் கொல்; காரணங்களைப் பிறகு உருவாக்கிக் கொள்ளலாம்”.

இதுதான் தற்போது சங் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து வெறியர்களின் பிரகனப்படுத்தப்படாத தாரக மந்திரம். ஒருவனைக் கொல்வதற்கு அல்லது கொலை வெறியுடன் தாக்குவதற்கு அவன் ‘இந்து அல்லாதவன்’ என்ற ஒரு காரணம் மட்டும் போதும் எனும் முடிவுடன் தங்கள் அழிப்பு வேலைகளை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள்.

நிக்காஹ் எனும் திருமணம்


தமிழ் சினிமாவில் இஸ்லாம் அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய சித்திரிப்புகள் எப்போதும் ஒரே மாதிரியான சாயலைக் கொண்டவை. அவை பெரும்பாலும் தீவிரவாதம், வன்முறை போன்றவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும். அல்லது மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காக மிகையான நற்குணங்களுடன் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பொதுவான பார்வையில் வீதிகளிலும், பொது இடங்களிலும் அருகில் நடமாடும் சாமானிய இஸ்லாமியர்களை பதட்டத்துடன் பார்க்கச் செய்யும் மனநிலையை உருவாக்குவதில் தீவிரத்துடன் இயங்கி வந்துள்ளன தமிழ்த் திரைப்படங்கள்.

தமிழர்கள் (அ) அகதிகள்

‘அகதிகளாக முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்கப் போனன். அவர்களுக்கு இலங்கைக்குள் நீதி கிடைக்காது. அதற்கான சட்டங்கள் இங்கு இல்லை’. இப்படிச் சொன்னது ஒரு தமிழர் அல்ல; சிங்கள இனத்தைச் சேர்ந்த இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா.

‘இலங்கையில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களை விட நன்றாகவே உள்ளன. அங்குள்ள மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை’. இதைச் சொன்னது ஒரு சிங்களர் அல்ல; ‘இந்து’ ராம் எனும் தமிழர்.

மொழி

சிக்கலான தலைப்பை எளிதாகக் கையாண்டிருக்கும் படம். மொழி என்பது ஆய்வாளர்களுக்கு இன்னும் தீர்ந்துவிடாத புதிர். அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பான முதலீடு. தமிழ் சினிமாவுக்கோ வரிவிலக்கு பெற வசதியான மற்றுமொறு தமிழ்ப்பெயர்.

ராதா மோகனின் ‘மொழி’க்கு வருவோம். வாழ்வு குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இரண்டு மேல்தட்டு வர்க்க இளைஞர்களின் (படத்தின் தயாரிப்பாளர் என்பதால், பிரகாஷ்ராஜையும் இளைஞர் என்று இயக்குனரைப் போல பார்வையாளர்களும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.) சேஷ்டைகளுடன் தொடங்கும் கதை,