முந்தைய தி.மு.க. அரசு செய்த உருப்படியான ஒன்றிரண்டு சாதனைகளுள் ஒன்று சமச்சீர்க்கல்வி. தமிழ்நாட்டில் ஏழை மாணவனுக்கு ஒரு விதமான கல்வி; பணக்கார மாணவனுக்கு வேறு விதமான கல்வி என்றிருக்கும் நிலை மாறுவதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவான சமச்சீர்க் கல்வி, தனியார் கல்வியை மையப்படுத்தி உருவாகியிருந்த அதிகார மையங்களை எரிச்சலைடைய வைத்தது.
இருட்டில் சமச்சீர்க் கல்வி - கணேஷ் சுப்ரமணி
காலங்களில் அவர் வசந்தம் - கணேஷ் சுப்ரமணி
கர்ணன் படத்தில் இடம் பெற்ற 'மழை கொடுக்கும் கொடை' எனும் பாடலை அடிக்கடி விரும்பிக் கேட்பதுண்டு. அக்காலத்தின் பின்னணிப் பாடல் ஜாம்பவான்கள் டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இருவரின் குரல்களும் அப்பாடலில் மிகுந்த கம்பீரத்துடன் ஒலிக்கும். இசையின் நடுவில் உறையும் மவுனத்தைப் போல அந்தக் வெண்கலக் குரல்களின் நடுவில் மென்மையாய் ஈர்க்கும் ஓர் ஆண் குரல். அது பி.பி.சீனிவாஸினுடையது.
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 3 - கணேஷ் சுப்ரமணி
அணிதலும் களை(த்)தலும்:
சங்க காலப் பெண்கள் தங்கள் தோற்றத்துக்குப் பொலிவூட்டும் வகையில் வித விதமான ஆடை, அணிகலன்களை அணிந்ததாகச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பஞ்சு, பட்டு, விலங்குகளின் மயிர் போன்றவற்றாலான அழகான ஆடைகளை அணிந்தனர். பலவிதமான கைவளைகள், மோசை எனும் மரகதக் கடைசெறி, பொன்னாலான சங்கிலிகள், பொன் ஞாண், காதணிகள், இடையில் மேகலை போன்றவற்றைப் பெண்கள் விரும்பி அணிந்ததாகத் தெரிகிறது.
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 2 - கணேஷ் சுப்ரமணி
சங்க இலக்கியத்தில் உடனுயிர் மாய்தல்:
சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் மற்றும் கைம்மை நோன்பு நோற்றல் குறித்த செய்திகள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் உடனுயிர் மாய்தல் குறித்த செய்திகள் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. போர்க்களத்தில் இறந்துபட்ட சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய மன்னர்களின் மனைவியர், தத்தம் கணவர்களின் மார்பில் வீழ்ந்து உயிர் மாண்டதாகப் புறநானூற்றில் ஒரு பாடலில் கூறப்படுகிறது.
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - 1 - கணேஷ் சுப்ரமணி
மனிதன் சாவை நாடும் மனநிலையும் சூழலும் தனித்துவம் வாய்ந்தவை. ‘உலகின் முக்கியப் பிரச்சினையே தற்கொலைதான்’ என்றார் ஆல்பர்ட் காம்யூ. ஒரு மனிதன், தன்னுடைய சாவை விழைந்து ஏற்பதற்குத் தனிப்பட்ட மனநிலை மட்டுமின்றி, அவன் வாழும் சமூகத்தின் நிர்ப்பந்தமும் முக்கியக் காரணமாகின்றது. அதாவது, ஒரு மனிதன் தன்னுடைய சாவை நாடிச் செல்வது தனிமனிதப் பிரச்சினையன்று; சமூகப் பிரச்சினை. சங்க இலக்கியத்தின் சில இடங்களில் அக்கால மகளிர் தங்களுடைய சாவை விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்வுகளைக் காணமுடிகிறது. சடங்கு வயப்பட்ட இந்நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சமூக அசைவியக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
விளையாட்டை விழுங்கும் ஆக்டோபஸ் - கணேஷ் சுப்ரமணி
சிறுவர்களின்
கோடை விடுமுறையைக் கோலாகலமாய்த் தின்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்
பெரும்புயலுடன் ஓய்ந்திருக்கின்றன. சூது கவ்விய போட்டிகளின் பின்னணித்
தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி
விட்டிருக்கின்றன. இறுதிப் போட்டியில் மற்ற அணிகளையெல்லாம் விரட்டிவிட்டு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான தொழில் அதிபர் சீனிவாசனின் சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின்
மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்த இறுதிப் போட்டியின்போது மட்டுமே
இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளது. சூதாட்டப்
புகார்களில் சென்னை அணியின் முதலாளி சீனிவாசன் முதல் ரெய்னா, தோனி வரை
பலருடைய பெயர்களும் அடி மேல் அடி வாங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகளில்
வீரர்களை விட அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும்தான் அதிகமாக
விளையாடியிருக்கிறார்கள்.
விந்தன் நாவல்களில் சாவெண்ணங்கள்
மனித வாழ்வில் சாவு என்பது தவிர்க்க முடியாமல் இணைந்த ஒன்று. என்றாலும், சாவு குறித்த மதிப்பீடுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும். சிலருக்கு அச்சமூட்டக் கூடியதாகவும் மற்றும் சிலருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் விளங்குவதால், சாவு குறித்து ஒவ்வொரு கால கட்டத்திலும் விரிவாகச் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு மனிதனின் மனம் மரணத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு அவன் வாழும் சூழல், எதிர்கொள்ளும் நிகழ்வுகள், இயல்பான உளநிலை ஆகியவை முக்கியக் காரணிகளாய் அமைகின்றன. இவ்வாறு சாவை நோக்கி ஈர்க்கப்படும் மனத்தின் கூறுகளை எழுத்தாளர் விந்தன் எழுதிய ஆகிய நாவல்களின் வழியே இந்தக் கட்டுரை ஆய்கிறது.
சமண மரபில் இறப்பும் அதற்குப் பின்னரும்
மனித
வாழ்வு சாவுடன் கட்டப்பட்டது. உலகளவில் சாவு மற்றும் அதற்குப் பின்னதான
நிலை குறித்த தேடலில்தான் சமயச் சிந்தனைகள் வளர்ச்சியடைந்தன. ஒவ்வொரு
சமயமும் தன்னுடைய தத்துவக் கட்டமைப்புக்குள் சாவு குறித்து ஆராய்ந்துள்ளன.
சமண சமய மரபில் நின்று சாவு மற்றும் அதற்குப் பிந்தைய மனித வாழ்வின்
இருப்பு அல்லது இன்மை குறித்த கோட்பாடுகளை ஆராயும் இச்சிறு ஆய்வுக்கு
ஒப்பீட்டளவில் பிற சமயச் சிந்தனைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பாரதியும் மொழியும் - கணேஷ் சுப்ரமணி
மொழி என்பது மக்களிடையே தகவல் பரிமாற்றப்
பணிகளுக்காக உருவான வழிமுறை என்பது ஓர் எளிமையான விளக்கம். ஆனால் இந்த
தகவல் பரிமாற்றத் தன்மை நிலவியல், தட்பவெப்பம், மனித உடற்கூறுகள்
போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும் தன்மை உடையது. அதாவது ஒரு மொழியின்
உருவாக்கத்தில் இக்கூறுகள் முக்கியப் பங்கு வகிப்பவை. இது மட்டுமல்லாது,
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது வேறுசில கூறுகள் சார்ந்ததாகவும் அமைகிறது.
அவை பொருளாதாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு உள்ளிட்டவை.
இவ்வனைத்து கூறுகளின் தாக்கத்திடையே மொழி பற்றிய விளக்கங்கள்
சிக்கலானவையாகின்றன. பல நூற்றாண்டுகளைக் கடந்து மொழி குறித்த விவாதங்கள்
தொடர்கின்றன.
கொலைவெறிக் குழந்தைகள்
சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியையாகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி, தன்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முகமது இர்பான் எனும் மாணவனால் வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குழந்தை வளர்ப்பின் சீர்கேட்டையும், இந்தியக் கல்விமுறையின் அவலத்தையும் அடையாளம் காட்டுவதாய் அமைந்துள்ளது.
சித்தர்களின் உளவியல்
சமூகத்தின்
உள்ளடக்கங்களில் எதிர்மறை அம்சங்கள் தவிர்க்க இயலாதவை. என்றாலும்
இவற்றுக்கு எதிரான குரல்கள் எழுவதும் எல்லாக் காலகட்டத்திலும் தவிர்க்க
முடியாதது. தமிழ்ச் சூழலில் இத்தகைய எதிர்ப்பபுகளை நிகழ்த்தியவர்களுள்
சித்தர்களுக்குத் தனியிடம் உண்டு. அவர்கள் தம்மைச் சுற்றி நிகழ்ந்த
அவலங்களைப் பொறுக்க முடியாமல் அவற்றிலிருந்து விடுபட்டு சமூக வெளிக்கு
அப்பால் நின்று சாடியவர்கள். மக்கள் படும் துயரங்களைக் கண்டு அவற்றுக்கான
காரணத்தைத் தேடியலைந்த சித்தர்களின் மனம் நிலையாமைத் தத்துவத்தைக்
கண்டடைந்து அதனைப் பறைசாற்றியது. வாழ்வின் அனைத்துக் கூறுகளையும்
கேள்விக்குட்படுத்தி அவர்கள் ஆராய்ந்தனர்.
கருப்புப் பணமும் வெள்ளித் திரையும்
சுவிஸ் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களுடைய
பணத்தின் மதிப்பு இருபத்தைந்து லட்சம் முதல் எழுபத்தைந்து லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் பத்து கோடி வரை ஒதுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்களுக்கே தெரியும்; அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்பதும், கொண்டு வர மாட்டார்கள் என்பதும்.
பணத்தின் மதிப்பு இருபத்தைந்து லட்சம் முதல் எழுபத்தைந்து லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் பத்து கோடி வரை ஒதுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்களுக்கே தெரியும்; அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்பதும், கொண்டு வர மாட்டார்கள் என்பதும்.
கர்னாடகா: மூன்றாவது சோதனைக் களம்
“முதலில் கொல்; காரணங்களைப் பிறகு உருவாக்கிக் கொள்ளலாம்”.
இதுதான் தற்போது சங் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து வெறியர்களின் பிரகனப்படுத்தப்படாத தாரக மந்திரம். ஒருவனைக் கொல்வதற்கு அல்லது கொலை வெறியுடன் தாக்குவதற்கு அவன் ‘இந்து அல்லாதவன்’ என்ற ஒரு காரணம் மட்டும் போதும் எனும் முடிவுடன் தங்கள் அழிப்பு வேலைகளை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள்.
இதுதான் தற்போது சங் பரிவாரத்தைச் சேர்ந்த இந்து வெறியர்களின் பிரகனப்படுத்தப்படாத தாரக மந்திரம். ஒருவனைக் கொல்வதற்கு அல்லது கொலை வெறியுடன் தாக்குவதற்கு அவன் ‘இந்து அல்லாதவன்’ என்ற ஒரு காரணம் மட்டும் போதும் எனும் முடிவுடன் தங்கள் அழிப்பு வேலைகளை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள்.
நிக்காஹ் எனும் திருமணம்
தமிழ் சினிமாவில் இஸ்லாம் அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய சித்திரிப்புகள் எப்போதும் ஒரே மாதிரியான சாயலைக் கொண்டவை. அவை பெரும்பாலும் தீவிரவாதம், வன்முறை போன்றவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும். அல்லது மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காக மிகையான நற்குணங்களுடன் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பொதுவான பார்வையில் வீதிகளிலும், பொது இடங்களிலும் அருகில் நடமாடும் சாமானிய இஸ்லாமியர்களை பதட்டத்துடன் பார்க்கச் செய்யும் மனநிலையை உருவாக்குவதில் தீவிரத்துடன் இயங்கி வந்துள்ளன தமிழ்த் திரைப்படங்கள்.
தமிழர்கள் (அ) அகதிகள்
‘அகதிகளாக முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்கப் போனன். அவர்களுக்கு இலங்கைக்குள் நீதி கிடைக்காது. அதற்கான சட்டங்கள் இங்கு இல்லை’. இப்படிச் சொன்னது ஒரு தமிழர் அல்ல; சிங்கள இனத்தைச் சேர்ந்த இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா.
‘இலங்கையில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களை விட நன்றாகவே உள்ளன. அங்குள்ள மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை’. இதைச் சொன்னது ஒரு சிங்களர் அல்ல; ‘இந்து’ ராம் எனும் தமிழர்.
‘இலங்கையில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களை விட நன்றாகவே உள்ளன. அங்குள்ள மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் எந்தவித பிரச்சினையும் இல்லை’. இதைச் சொன்னது ஒரு சிங்களர் அல்ல; ‘இந்து’ ராம் எனும் தமிழர்.
மொழி
சிக்கலான தலைப்பை எளிதாகக் கையாண்டிருக்கும் படம். மொழி என்பது ஆய்வாளர்களுக்கு இன்னும் தீர்ந்துவிடாத புதிர். அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பான முதலீடு. தமிழ் சினிமாவுக்கோ வரிவிலக்கு பெற வசதியான மற்றுமொறு தமிழ்ப்பெயர்.
ராதா மோகனின் ‘மொழி’க்கு வருவோம். வாழ்வு குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இரண்டு மேல்தட்டு வர்க்க இளைஞர்களின் (படத்தின் தயாரிப்பாளர் என்பதால், பிரகாஷ்ராஜையும் இளைஞர் என்று இயக்குனரைப் போல பார்வையாளர்களும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.) சேஷ்டைகளுடன் தொடங்கும் கதை,
Subscribe to:
Posts (Atom)