பேச்சு

கல்யாண வீடுகளில்
யாரும் யாருடனும்
பேசிக் கொண்டிருக்க
நேரமிருப்பதில்லை.

அறுந்து அறுந்து
தொங்கும் உரையாடல்களில்
நிறைவில்லை.
இழவு வீடுகள்
அனைவருக்கும்
சுகமானவை.
யாரிடமும் பேச முடியாமல்
கிடத்தப்பட்டிருப்பவனைத் தவிர.
 கீற்று.காம், 03 நவம்பர் 2011

No comments:

Post a Comment

கருத்துக்கள்