பாரதியும் மொழியும் - கணேஷ் சுப்ரமணி

மொழி என்பது மக்களிடையே தகவல் பரிமாற்றப் பணிகளுக்காக உருவான வழிமுறை என்பது ஓர் எளிமையான விளக்கம். ஆனால் இந்த தகவல் பரிமாற்றத் தன்மை நிலவியல், தட்பவெப்பம், மனித உடற்கூறுகள் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும் தன்மை உடையது. அதாவது ஒரு மொழியின் உருவாக்கத்தில் இக்கூறுகள் முக்கியப் பங்கு வகிப்பவை. இது மட்டுமல்லாது, ஒரு மொழியின் வளர்ச்சி என்பது வேறுசில கூறுகள் சார்ந்ததாகவும் அமைகிறது. அவை பொருளாதாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு உள்ளிட்டவை. இவ்வனைத்து கூறுகளின் தாக்கத்திடையே மொழி பற்றிய விளக்கங்கள் சிக்கலானவையாகின்றன. பல நூற்றாண்டுகளைக் கடந்து மொழி குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.

கொலைவெறிக் குழந்தைகள்

சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியையாகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி, தன்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முகமது இர்பான் எனும் மாணவனால் வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குழந்தை வளர்ப்பின் சீர்கேட்டையும், இந்தியக் கல்விமுறையின் அவலத்தையும் அடையாளம் காட்டுவதாய் அமைந்துள்ளது.

புன்னகை

வாசிக்கும் பக்கங்களில்
எல்லாம் தானாக வந்து
ஒட்டிக் கொள்கிறது.
உன் புன்னகை.

சித்தர்களின் உளவியல்

சமூகத்தின் உள்ளடக்கங்களில் எதிர்மறை அம்சங்கள் தவிர்க்க இயலாதவை. என்றாலும் இவற்றுக்கு எதிரான குரல்கள் எழுவதும் எல்லாக் காலகட்டத்திலும் தவிர்க்க முடியாதது. தமிழ்ச் சூழலில் இத்தகைய எதிர்ப்பபுகளை நிகழ்த்தியவர்களுள் சித்தர்களுக்குத் தனியிடம் உண்டு. அவர்கள் தம்மைச் சுற்றி நிகழ்ந்த அவலங்களைப் பொறுக்க முடியாமல் அவற்றிலிருந்து விடுபட்டு சமூக வெளிக்கு அப்பால் நின்று சாடியவர்கள். மக்கள் படும் துயரங்களைக் கண்டு அவற்றுக்கான காரணத்தைத் தேடியலைந்த சித்தர்களின் மனம் நிலையாமைத் தத்துவத்தைக் கண்டடைந்து அதனைப் பறைசாற்றியது. வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் கேள்விக்குட்படுத்தி அவர்கள் ஆராய்ந்தனர்.

சுருதி சேராத ஸ்ருதி

ஆறாம் அறிவைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்க்க வேண்டிய ஏழாம் அறிவு திரைப்படம் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆனால் இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம் அந்த விவாதத்தைத் தொடருவதல்ல. அந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ள ஸ்ருதிஹாசன் ('உலக நாயகன்' கமலஹாசனின் மகள்) எனும் புகழ்பெற்ற வாரிசு நடிகையைப் பற்றியது.

பேச்சு

கல்யாண வீடுகளில்
யாரும் யாருடனும்
பேசிக் கொண்டிருக்க
நேரமிருப்பதில்லை.

ஸ்பரிசம்

என் கவிதைகளை
நீ குளிக்கும் நதியில்
மிதக்க விடுகிறேன்.

உனக்குத் தெரிகிறதா?
உனக்காக எழுதிய வரிகள்
உன்னை வருடி செல்வது.