விழுங்கும் திரை - கணேஷ் சுப்ரமணி


டிக்கெட் கிழித்து உள்ளே சென்றதும்
அனைத்தையும் விழுங்கும்
திரை

தமிழ்நாட்டை விழுங்கிய
திரையரங்கின் இருள்

பெண்களுக்குத் தனிக்கல்லூரி தேவையில்லை - கல்யாணி

கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாம் பகுதி

கே: டியூசன் எடுப்பதைப் பற்றி சொல்லுங்கள்.

தனியார் கல்வி தரமானதல்ல - கல்யாணி


கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் இரண்டாம் பகுதி

கே: மெட்ரிக் பள்ளிகளில் படித்தால் மட்டுமே வளர்ச்சியடைய முடியும் என்ற நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையை அடைய தனியார் பள்ளிகள் என்னவெல்லாம் செய்தார்கள்?

தரமற்ற கல்வியின் அடையாளம் ஆங்கிலக்கல்வி - கல்யாணி


கல்வியாளர் கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடல்

கே: மாற்றுக் கல்வி குறித்த உங்களின் செயல்பாடுகள் எப்படித் தொடங்கின?

ஏதோ ஒன்று - கணேஷ் சுப்ரமணி

நாலாம் தெரு ஜோதிமணியின் 
சாவுக்குப் போயிருந்தபோது
அவளைப் பார்க்க முடிந்தது.
பேச முடியவில்லை.

மூக்கைச் சீந்தி அழுத முகத்தையே
உற்றுப் பார்த்தேன்.
அவளும் பார்த்தாள் அவ்வப்போது.

பத்மநாபசுவாமி கோயில்: மன்னர் கால சுவிஸ் வங்கி - கணேஷ் சுப்ரமணி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.

இந்தியப் பெண் - கணேஷ் சுப்ரமணி


இந்தியா
அற்றை நாளில்
இது ஆண்களின் தேசம்.

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
கணவன் செத்ததும் மனைவியைத்
தீயில் தள்ளிச் சுட்டெரித்த தேசம்.