4

கடவுளின் மோசமான
படைப்பு
மனிதன்

மனிதனின் அற்புதமான
படைப்பு
கடவுள்

3


உடல்
என்பது
வெறும்
உடல்தான்

2

திருடனைத்
திருடன் என்று
திருடர்களும்
சொல்வார்கள்

1

முடியவில்லை
என்பதன் அர்த்தம்
முயலவில்லை
என்பதே

பொள்ளாச்சி - கணேஷ் சுப்ரமணி

அடங்க மறுக்கும்
ஆண் குறிகள்
அறுபட வேண்டியவை

காதல் போற்றுதும் - கணேஷ் சுப்ரமணி

காற்றுடன் காதல் நிரம்பிய
வெளியெங்கும்
திகட்டத் திகட்டத்
திளைத்துத் திரியும்
உள்ளங்களால்
நிலைத்து நீடிக்கிறது
எல்லாமும்.

ஆதிபகவன் முதற்றே உலகு - கணேஷ் சுப்ரமணி

வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு.