பூ

உன் கூந்தலுக்கு
ஒரு பூ
இல்லையென்றால்
இந்த செடிகளுக்கு
தண்ணீர் எதற்கு.?

நீ..

என் பக்கங்கள்
முழுவதும்
உன் பெயர்
உன் முகம்
உன் அழகு

ஆனாலும்
நீ.. நீதான்!

விளையாட்டை விழுங்கும் ஆக்டோபஸ் - கணேஷ் சுப்ரமணி

சிறுவர்களின் கோடை விடுமுறையைக் கோலாகலமாய்த் தின்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் பெரும்புயலுடன் ஓய்ந்திருக்கின்றன. சூது கவ்விய போட்டிகளின் பின்னணித் தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி விட்டிருக்கின்றன. இறுதிப் போட்டியில் மற்ற அணிகளையெல்லாம் விரட்டிவிட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான தொழில் அதிபர் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்த இறுதிப் போட்டியின்போது மட்டுமே இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளது. சூதாட்டப் புகார்களில் சென்னை அணியின் முதலாளி சீனிவாசன் முதல் ரெய்னா, தோனி வரை பலருடைய பெயர்களும் அடி மேல் அடி வாங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்களை விட அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும்தான் அதிகமாக விளையாடியிருக்கிறார்கள்.

விந்தன் நாவல்களில் சாவெண்ணங்கள்

மனித வாழ்வில் சாவு என்பது தவிர்க்க முடியாமல் இணைந்த ஒன்று. என்றாலும், சாவு குறித்த மதிப்பீடுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும். சிலருக்கு அச்சமூட்டக் கூடியதாகவும் மற்றும் சிலருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் விளங்குவதால், சாவு குறித்து ஒவ்வொரு கால கட்டத்திலும் விரிவாகச் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு மனிதனின் மனம் மரணத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு அவன் வாழும் சூழல், எதிர்கொள்ளும் நிகழ்வுகள், இயல்பான உளநிலை ஆகியவை முக்கியக் காரணிகளாய் அமைகின்றன. இவ்வாறு சாவை  நோக்கி ஈர்க்கப்படும் மனத்தின் கூறுகளை எழுத்தாளர் விந்தன் எழுதிய ஆகிய நாவல்களின் வழியே இந்தக் கட்டுரை ஆய்கிறது.

சமண மரபில் இறப்பும் அதற்குப் பின்னரும்

மனித வாழ்வு சாவுடன் கட்டப்பட்டது. உலகளவில் சாவு மற்றும் அதற்குப் பின்னதான நிலை குறித்த தேடலில்தான் சமயச் சிந்தனைகள் வளர்ச்சியடைந்தன. ஒவ்வொரு சமயமும் தன்னுடைய தத்துவக் கட்டமைப்புக்குள் சாவு குறித்து ஆராய்ந்துள்ளன. சமண சமய மரபில் நின்று சாவு மற்றும் அதற்குப் பிந்தைய மனித வாழ்வின் இருப்பு அல்லது இன்மை குறித்த கோட்பாடுகளை ஆராயும் இச்சிறு ஆய்வுக்கு ஒப்பீட்டளவில் பிற சமயச் சிந்தனைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

புத்தகம்

மாணவர்களுக்கு வகுப்பறை எல்லாம்
பள்ளியறை என்றால்
புத்தகங்கள்தான்
தலையணை!

அம்மா பாடாத தாலாட்டை
ஆசிரியர் பாடும் போது
அவர் கைகளில் வீணையாய்
தவழ்வது புத்தகம்.