ஒரு பள்ளிக்கூடத்தின் மரணம் - கணேஷ் சுப்ரமணி


கல்லறை அழைக்கும் 
கடைசிக் காலத்தில்
ஒவ்வொரு மனிதனும்
திரும்பிச் செல்ல ஏங்கும்

இடங்கள் இரண்டு.

எங்கள் வீடு - கணேஷ் சுப்ரமணி

முன்பு எங்கள் வீட்டில்
நிறைய பேர் இருந்தார்கள்
தாத்தா, பாட்டி,
அப்பா, அம்மா,
சித்தி, சித்தப்பா,
பெரியம்மா, பெரியப்பா,
அண்ணன், அக்கா..,

அர்த்தங்கள் - கணேஷ் சுப்ரமணி


ஆண்கள்
இரட்டை அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.

பெண்கள்
இரண்டாயிரம் அர்த்தத்தில்
பேசுகிறார்கள்.

திசைமாறிய இசைப்புயல் - கணேஷ் சுப்ரமணி


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்த போதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு முறை நிகழ்ந்து மறையும் அதிசயம் (one time wonder) என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

காதல் - கணேஷ் சுப்ரமணி

கேட்ட மாத்திரத்தில்
மனிதனை மயக்கும்
மந்திர வார்த்தை 
காதல்.

காதலைப் பாடாத கவிஞனும் இல்லை

காதலி தேடாத இளைஞனும் இல்லை.

தி.ஜானகிராமன் நாவல்களில் தற்கொலை - கணேஷ் சுப்ரமணி


தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் உளவியல் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டாலும், சமூகப் பின்புலத்தைப் புறக்கணித்துவிட்டு இப்பிரச்சினையின் ஆழத்தைக் கண்டுவிட முடியாது. ஒரு மனிதனின் உளவியலை அவன் சார்ந்த சமூகப் பின்னணியுடன் விவரிப்பதில் முன்நிற்கும் இலக்கிய வடிவம் நாவல். க்தமிழ்ப் படைப்புலகில் தனிமனித உளவியற் கூறுகளைத் தம் நாவல்களில் சித்திரத்த எழுத்தாளர்களுள் தனித்துவம் பெற்றவராக அடையாளம் காணப்படுபவர் தி.ஜானகிராமன். அவருடைய நாவல்களில் புலனாகும் தற்கொலை நிகழ்வுகளை அவற்றின் உளவியற் பின்னணியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

தில்சன் - திராணியற்ற சமூகம் - கணேஷ் சுப்ரமணி

அப்பாவித் தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்படுவது இலங்கையில்தான் நடந்து வந்தது. தற்போது அந்த பாணியைத் தமிழ்நாட்டிலும் நிகழ்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது இந்திய ராணுவம். இலங்கையில் நடந்ததை வேடிக்கை பார்த்தது போல் தற்போதும் மவுனமாய் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவக் குடியிருப்பில் வாதாம் பழக்கொட்டைகளைப் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார் ஓர் இந்திய ராணுவ அதிகாரி.