கொரோனாவுக்குப் பின்.. - கணேஷ் சுப்ரமணி

பூமி வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்களின் உழைப்பு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல; வரலாற்றையும் மாற்றிக் கொண்டிருக்கிறது கொரோனா. இந்தக் கொடுந்தொற்று நோயிலிருந்து உலகம் மீளலாம். ஆனால் இந்நோய் உருவாக்கியிருக்கும் தாக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இருக்கும்.