பொன்னியின் செல்வன் - 1

 'பொன்னியின் செல்வன்’ நேற்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்க்கும் போது உணர்ந்த விஷயங்கள்:

1. மகிழ்மதிக்கும் சோழநாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாட்டின் மேல் மன்னர்களுக்கு இருக்கும் ஆசை, மோகம், வெறி எல்லாம் அக்கறை, அன்பு, பற்று என்றே காட்டப்படுகிறது. ரசிகர்களாலும் அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. (உடனே ‘பாகுபலியையும் பொன்னியின் செல்வனையும் எப்படி ஒப்பிடலாம்? அது கற்பனை, இது வரலாறு’ என்றெல்லாம் சொல்ல வேணாம். இரண்டுமே புனைவுதான்.)