வனாந்திரம் - கணேஷ் சுப்ரமணி


பின்னிரவுப் பொழுதின்
அரைநிலா ஒளியில்
ஆளரவமற்ற
நெடுஞ்சாலையிலிருந்து
பிரிந்து செல்லும்
குறுஞ்சாலையில்
தன்னந்தனியே நடந்தேன்.

பதின் பருவத்தில்
இறந்துபோன சினேகிதியின்
உருவம் அருகில் அசைந்தது.
கூடவே
சலசலக்கும் காற்றின்
வினோத சத்தங்களின்
நடுவே சன்னமாய்க் கேட்டது
சின்னதாய் அழுகையொலி.