கடவுளற்ற உலகம் - கணேஷ் சுப்ரமணி


தன்னை நோக்கி வரும்
அவலக் குரல்களுக்குக்
காதை மூடிக்கொள்ளும்
கடவுள்களின் முகம்
காணச் சகிக்கவில்லை.
அவர்கள் படைத்த உலகமும்
அப்படித்தான் இருக்கிறது.
கடவுளற்ற உலகத்தைப்
படைக்க

மனிதர்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.