பொன்னியின் செல்வன் - 1

 'பொன்னியின் செல்வன்’ நேற்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்க்கும் போது உணர்ந்த விஷயங்கள்:

1. மகிழ்மதிக்கும் சோழநாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாட்டின் மேல் மன்னர்களுக்கு இருக்கும் ஆசை, மோகம், வெறி எல்லாம் அக்கறை, அன்பு, பற்று என்றே காட்டப்படுகிறது. ரசிகர்களாலும் அவ்வாறே புரிந்து கொள்ளப்படுகிறது. (உடனே ‘பாகுபலியையும் பொன்னியின் செல்வனையும் எப்படி ஒப்பிடலாம்? அது கற்பனை, இது வரலாறு’ என்றெல்லாம் சொல்ல வேணாம். இரண்டுமே புனைவுதான்.)

தாய்க்குருவி - கணேஷ் சுப்ரமணி


லாரியில் மரம்

வாயில் இரையுடன்

தாய்க்குருவி

தமிழ் நாடகம்: அன்றும் இன்றும் (உரை) - கணேஷ் சுப்ரமணி

 


மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெண் கல்விச் சிந்தனைகள் - கணேஷ் சுப்ரமணி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டம் இந்தியச் சமூகச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு முந்தைய காலகட்டத்தின் மதிப்பீடுகள் பெரும் சிதைவுகளையும், மாற்றங்களையும் சந்தித்த காலம் அது. வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் ஆதிக்கம், கிறித்தவச் சமயப் பரவல் போன்றவற்றால் இங்கு கல்வி முறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. காலங்காலமாக இருந்து வந்த வேதக் கல்வி, குருகுலக் கல்வி போன்றவை மாற்றம் பெற்றன. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான ஒன்றாக இருந்த பார்வையும் மாறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி கற்ற சில இந்தியர்களால் புதிய கல்விச் சிந்தனைகள் மலர்ந்தன. தமிழ்ச் சூழலில் இப்புதிய சிந்தனைகளைப் பேரூற்றாகப் பெருக்கெடுக்கச் செய்தவர் பாரதியார். குறிப்பாகப் பெண் கல்வி குறித்த அவருடைய சிந்தனைகள் அன்றையச் சூழலில் மரபுகளை மீறியதாகவும் எதிர்காலச் சிந்தனைகளின் முன்னறிவிப்பாகவும் இருந்தன. ஆனால் அவருக்கு முன்பே தமிழ் மரபுகளிலிருந்து விலகாமல் பெண் கல்வி குறித்த சிந்தனைகளை முன்வைத்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

நூல்கள்: வாசிக்க, நேசிக்க, சுவாசிக்க.. (நேர்காணல்) கணேஷ் சுப்ரமணி


இருத்தலிய உளப்பகுப்பாய்வு நோக்கில் தமிழ் நாவல்கள் - உரை - கணேஷ் சுப்ரமணி


ஒரு நண்பனின் மரணம் - கணேஷ் சுப்ரமணி

நள்ளிரவுக்கு நிமிடங்கள் மீதமிருக்கும்

ஓர் அகால வேளையில் குற்றொலியுடன்

அலைபேசித் திரையில் வந்து சேர்ந்தது

நண்பனின் மரணம்.