5

வேடிக்கை பார்ப்பவர்களை
இழந்துவிட்ட
சாலையோர மரங்களும்
கண்மாய்களும்
செல்போன்களைச்
சபிக்கின்றன.

முற்பொழுதுகளில்
தமக்கிருந்த பெருமதிப்பை
இழந்த
ஜன்னலோர இருக்கைகளும்
உடன் சேர்ந்து
முனகுகின்றன.