தமிழ் இசை உலகில் ஏராளமான ஆண் குரல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் ஆண்மைக் குரல்கள் அபூர்வம். திரையிசையில் சி.எஸ். ஜெயராமனின் குரலுக்கு அடுத்து ஒலித்த ஆண்மைக் குரலாக நாகூர் ஹனிபாவைச் சொல்லலாம். அந்த ஆண்மைக் குரல் தற்போது அடங்கியிருக்கிறது.
திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் குறைவுதான். அதைத் தாண்டி இஸ்லாமிய பக்திப் பாடல்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புப் பாடல்கள் போன்றவற்றின் மூலமாகவே ஹனிபாவின் குரல் அதிகளவு காதுகளைச் சென்றடைந்தது.
தேர்தல் காலங்களில் தி.மு.க.விற்காக ஹனிபா பாடிய கொள்கைப் பரப்புப் பாடல்கள் ஒலிக்காத தெருக்களே தமிழ்நாட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. 'ஓடி வருகிறான் உதயசூரியன்', 'உடன்பிறப்பே கழக உடன்பிறப்பே' என்று இவர் பாடிய பாடல்களால் உதயசூரியனை நோக்கி ஓடி வந்த கழக உடன்பிறப்புகள் அதிகமிருப்பார்கள்.
சினிமாவில் இவருடைய குரலை மிக அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார்கள். இளையராஜாவின் இசையில் செம்பருத்தி படத்தில் மனோவுடன் இணைந்து ஹனிபா பாடிய 'கடலிலே தனிமையில்' எனும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அத்தனை சுகமான பாட்டு. ராமன் அப்துல்லா படத்தில் வரும் 'உன் மதமா என் மதமா' பாடலில் தேவைப்பட்ட தத்துவார்த்தப் பொருண்மையை இவருடைய குரலே தந்தது.
நீண்ட காலம் பல மேடைகளில் உச்ச ஸ்தாயியில் பாடியதால் அவரின் காது நரம்புகள் பாதிப்படைந்து கடைசிக் காலகட்டத்தில் காது கேட்கும் திறனை இழந்திருந்தார். நம் காதுகளை மகிழ்விப்பதற்காகத் தன் காதுகளை இழந்த அபூர்வமான ஆளுமை ஹனிபா.
நூறாண்டுகளுக்குச் சற்று குறைவாக வாழ்ந்து மறைந்துள்ள நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இன்னும் வெகு காலத்திற்கு இஸ்லாமியர்களின் வாழ்வோடு இணைந்திருக்கும். மதம் தாண்டிய மனங்களிலும்தான். அவருக்கு மாற்றாக அமையும் குரல் ஆளுமை உருவாக இன்னும் வெகு காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். இசையால் வசமாகும் நல்ல மனங்களுக்கு அதைத் தவிர வேறு என்ன வேலை?
'பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்; அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை' என்று அவர் பாடினார். ஆனால் அவன் மூடி விட்டான்.
திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் குறைவுதான். அதைத் தாண்டி இஸ்லாமிய பக்திப் பாடல்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புப் பாடல்கள் போன்றவற்றின் மூலமாகவே ஹனிபாவின் குரல் அதிகளவு காதுகளைச் சென்றடைந்தது.
நம்
காலத்தின் தமிழ்ப் பக்திப் பாடல்கள் என்றதும் எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி,
டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஜேசுதாஸ் போன்ற பெயர்கள்
சட்டென நினைவுக்கு வருபவை. இஸ்லாமியப் பாடல்கள் என்றால் ஹனிபாவின் குரல்
மட்டுமே நினைவில் வரும். இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை எனும் பாடல் மதங்களைத் தாண்டி மக்களை ஈர்த்த
பாடல்.
தேர்தல் காலங்களில் தி.மு.க.விற்காக ஹனிபா பாடிய கொள்கைப் பரப்புப் பாடல்கள் ஒலிக்காத தெருக்களே தமிழ்நாட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. 'ஓடி வருகிறான் உதயசூரியன்', 'உடன்பிறப்பே கழக உடன்பிறப்பே' என்று இவர் பாடிய பாடல்களால் உதயசூரியனை நோக்கி ஓடி வந்த கழக உடன்பிறப்புகள் அதிகமிருப்பார்கள்.
சினிமாவில் இவருடைய குரலை மிக அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார்கள். இளையராஜாவின் இசையில் செம்பருத்தி படத்தில் மனோவுடன் இணைந்து ஹனிபா பாடிய 'கடலிலே தனிமையில்' எனும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் அத்தனை சுகமான பாட்டு. ராமன் அப்துல்லா படத்தில் வரும் 'உன் மதமா என் மதமா' பாடலில் தேவைப்பட்ட தத்துவார்த்தப் பொருண்மையை இவருடைய குரலே தந்தது.
நீண்ட காலம் பல மேடைகளில் உச்ச ஸ்தாயியில் பாடியதால் அவரின் காது நரம்புகள் பாதிப்படைந்து கடைசிக் காலகட்டத்தில் காது கேட்கும் திறனை இழந்திருந்தார். நம் காதுகளை மகிழ்விப்பதற்காகத் தன் காதுகளை இழந்த அபூர்வமான ஆளுமை ஹனிபா.
நூறாண்டுகளுக்குச் சற்று குறைவாக வாழ்ந்து மறைந்துள்ள நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இன்னும் வெகு காலத்திற்கு இஸ்லாமியர்களின் வாழ்வோடு இணைந்திருக்கும். மதம் தாண்டிய மனங்களிலும்தான். அவருக்கு மாற்றாக அமையும் குரல் ஆளுமை உருவாக இன்னும் வெகு காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். இசையால் வசமாகும் நல்ல மனங்களுக்கு அதைத் தவிர வேறு என்ன வேலை?
'பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்; அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை' என்று அவர் பாடினார். ஆனால் அவன் மூடி விட்டான்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்