
முந்தைய தி.மு.க. அரசு செய்த உருப்படியான ஒன்றிரண்டு சாதனைகளுள் ஒன்று சமச்சீர்க்கல்வி. தமிழ்நாட்டில் ஏழை மாணவனுக்கு ஒரு விதமான கல்வி; பணக்கார மாணவனுக்கு வேறு விதமான கல்வி என்றிருக்கும் நிலை மாறுவதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவான சமச்சீர்க் கல்வி, தனியார் கல்வியை மையப்படுத்தி உருவாகியிருந்த அதிகார மையங்களை எரிச்சலைடைய வைத்தது.