மொழி என்பது மக்களிடையே தகவல் பரிமாற்றப்
பணிகளுக்காக உருவான வழிமுறை என்பது ஓர் எளிமையான விளக்கம். ஆனால் இந்த
தகவல் பரிமாற்றத் தன்மை நிலவியல், தட்பவெப்பம், மனித உடற்கூறுகள்
போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும் தன்மை உடையது. அதாவது ஒரு மொழியின்
உருவாக்கத்தில் இக்கூறுகள் முக்கியப் பங்கு வகிப்பவை. இது மட்டுமல்லாது,
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது வேறுசில கூறுகள் சார்ந்ததாகவும் அமைகிறது.
அவை பொருளாதாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு உள்ளிட்டவை.
இவ்வனைத்து கூறுகளின் தாக்கத்திடையே மொழி பற்றிய விளக்கங்கள்
சிக்கலானவையாகின்றன. பல நூற்றாண்டுகளைக் கடந்து மொழி குறித்த விவாதங்கள்
தொடர்கின்றன.
பாரதியும் மொழியும் - கணேஷ் சுப்ரமணி
கொலைவெறிக் குழந்தைகள்
சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியையாகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி, தன்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முகமது இர்பான் எனும் மாணவனால் வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குழந்தை வளர்ப்பின் சீர்கேட்டையும், இந்தியக் கல்விமுறையின் அவலத்தையும் அடையாளம் காட்டுவதாய் அமைந்துள்ளது.
சித்தர்களின் உளவியல்

Subscribe to:
Posts (Atom)