ராசா மகன் - கணேஷ் சுப்ரமணி
இளையராஜா 50 - கணேஷ் சுப்ரமணி
அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.
டிராகன் - கணேஷ் சுப்ரமணி
கல்லூரியைக் களமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் அசலான கல்லூரி வாழ்க்கையை இவை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. எந்தக் கிரகத்திலும் இல்லாத கல்லூரிகள்தான் சினிமாவில் காட்டப்பட்டு வந்துள்ளன. அதிலும் நாற்பத்தைந்து வயதைக் கடந்த கதாநாயகர்களும் தலையில் விக்குடன் கல்லூரிக்குப் போகும் காட்சியைக் காணும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நம் ரசிகர்கள். இப்போ சொல்ல வந்தது அதுவல்ல. சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற டிராகன் திரைப்படம் பற்றி.
திகட்டத் திகட்ட வாழ்ந்தவர்களின் கதை - கணேஷ் சுப்ரமணி
90s kids என்றோர் இனமுண்டு. அதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அதற்குச் சற்று முன் வாழ்ந்த இன்னோர் இனமுண்டு. அதற்கு ‘90s teens’ என்று பெயர் வைக்கலாம். கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸ், காரண காரியத் தொடர்பின்றி ஒரு பெரிய கல்லை மலைமேல் ஏற்றிச் செல்வதைப் போல பழைய நினைவுகள் எனும் தாங்க முடியாத பெரும் பாரத்தைச் சுமந்து திரிபவர்கள்தான் இந்த 90s teens. மாற்றம் ஒன்றே மாறாதது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்; எல்லாக் காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் கண்முன்னால் சகிக்க முடியாத வேகத்தில் நிகழும் மாற்றத்தைக் கண்டு உலர்ந்து போயிருக்கும் ஒரு தலைமுறை என்று இவர்களைச் சொல்லலாம்.
மாமன்னன்: எதிர்வினைகளும் எதிர்பாராத வினைகளும் - கணேஷ் சுப்ரமணி
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு நிகழ்ந்த எதிர்வினைகளை, படம் வெளியாவதற்கு முன், திரையரங்கில் வெளியான பின், ஓடிடி தளத்தில் வெளியான பின் என்று மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்த்துத் தமிழ்ச் சமூகத்தின் பொது உளநிலையை அலசலாம். இந்த எதிர்வினைகளின் பின்னால் உள்ள உளவியல் பெரும்பாலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததும்தான். அதைப் பற்றிக் கடைசியில் பேசலாம். அதற்கு முன் படத்தைப் பார்க்கலாம்.
காட்டு மல்லி வாசம் - கணேஷ் சுப்ரமணி
வெற்றிமாறனின் விடுதலை படத்துக்காக இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி பலரையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக
இளையராஜா பாடியிருக்கும் ‘காட்டு மல்லி’ பாடலில் ஏதோவொரு வசீகரம் இருப்பதாக ராஜாவின் ரசிகர்கள்
சிலாகித்துப் போயிருக்கிறார்கள். இந்தக் காட்டு மல்லி பாடலைப் பற்றி சாரு
நிவேதிதாவின் பதிவொன்றைக் கண்டேன். மனிதருக்கு இளையராஜா மீது ஏன் இத்தனை வெறுப்பு
என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் நொந்து போய் மிகுந்த மன
உளைச்சலில் இருக்கிறாராம். சாருவின் மற்ற பதிவுகளில் ராஜாவைப் பற்றித் தேடிப்
படித்துப் பார்த்தால் எல்லாவற்றிலுமே இளையராஜாவைத் திட்டியிருக்கிறார். ஒரு
பதிவில் அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். பாப் மார்லி, கத்தார் ஆகியோரைக் குப்பை
என்று இளையராஜா திட்டியிருக்கிறாராம். அவர்களின் இசை ராஜாவுக்குப் பிடிக்கவில்லை
என்றால் அவர் விமர்சிக்கக் கூடாதா?
பிடிக்காதவர்களைத் திட்டும்
உரிமை சாருவுக்கு மட்டும்தான் சொந்தமா?
பொன்னியின் செல்வன் - 1
'பொன்னியின் செல்வன்’ நேற்றுதான் பார்த்தேன். படத்தைப் பார்க்கும் போது உணர்ந்த விஷயங்கள்:
பத்மாவத் (இந்தி) - கணேஷ் சுப்ரமணி
இந்திரணின் ராணி: அவதாரங்களும் அதிகாரங்களும் - கணேஷ் சுப்ரமணி
வினோத் மலைச்சாமியின் இந்திரணின் ராணி குறும்படம், நால் வருணப் படைகளுக்கு எதிராக அவ்வருணங்களின் வரையறைகளில் இடமளிக்கப்படாத வருணமற்ற சாதியினரின் குரலாக ஒலிக்கிறது.
பிறப்பு கொண்டு ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் வருண அமைப்பில் நான்கு வருணங்களும் தங்களுக்குள் அதிகாரத்திற்கான மோதலை நிகழ்த்தியபடியே இருக்கின்றன. வருணங்களுக்குள் இல்லாத வருணம் அற்ற சாதியினருக்கு எதிரானதாகவும் அவர்களை அதிகாரப் போட்டியின் வரம்புக்குள்ளேயே கொண்டு வந்துவிடக் கூடாது என்கிற கவனமும் இந்த வருண மோதல்களின் இணைப் போக்காக வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கிறது.
பாரம்: சுமையாகும் சுமைதாங்கிகளின் கதை - கணேஷ் சுப்ரமணி
சைக்கோ: கொலைகளின் உளவியல் - கணேஷ் சுப்ரமணி
ஆழ்துளைச் சமூகத்தில் அறம் - கணேஷ் சுப்ரமணி
அப்பா: ஓர் அலசல் - கணேஷ் சுப்ரமணி
பொக்கிஷத்தை மூடி விட்ட இறைவன் - கணேஷ் சுப்ரமணி
திசைமாறிய இசைப்புயல் - கணேஷ் சுப்ரமணி
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்த போதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு முறை நிகழ்ந்து மறையும் அதிசயம் (one time wonder) என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
காலங்களில் அவர் வசந்தம் - கணேஷ் சுப்ரமணி
கருப்புப் பணமும் வெள்ளித் திரையும்
சுவிஸ் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களுடைய பணத்தின் மதிப்பு இருபத்தைந்து லட்சம் முதல் எழுபத்தைந்து லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சுமார் பத்து கோடி வரை ஒதுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்களுக்கே தெரியும்; அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்பதும், கொண்டு வர மாட்டார்கள் என்பதும்.
நிக்காஹ் எனும் திருமணம்
தமிழ்
சினிமாவில் இஸ்லாம் அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய சித்திரிப்புகள்
எப்போதும் ஒரே மாதிரியான சாயலைக் கொண்டவை. அவை பெரும்பாலும் தீவிரவாதம்,
வன்முறை போன்றவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும். அல்லது மத நல்லிணக்கத்தை
வலியுறுத்துவதற்காக மிகையான நற்குணங்களுடன் செயற்கையான முறையில்
உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பொதுவான பார்வையில் வீதிகளிலும், பொது
இடங்களிலும் அருகில் நடமாடும் சாமானிய இஸ்லாமியர்களை பதட்டத்துடன்
பார்க்கச் செய்யும் மனநிலையை உருவாக்குவதில் தீவிரத்துடன் இயங்கி வந்துள்ளன
தமிழ்த் திரைப்படங்கள்.மொழி
ராதா மோகனின் ‘மொழி’க்கு வருவோம். வாழ்வு குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இரண்டு மேல்தட்டு வர்க்க இளைஞர்களின் (படத்தின் தயாரிப்பாளர் என்பதால், பிரகாஷ்ராஜையும் இளைஞர் என்று இயக்குனரைப் போல பார்வையாளர்களும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.) சேஷ்டைகளுடன் தொடங்கும் கதை,

















