Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

இணைய வெளியில் ஆசிரியர்கள் - கணேஷ் சுப்ரமணி


சட்டென்று மாறிய வானிலையைப் போல் கொரோனா காலம் கல்விச் சூழலை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. ஆசிரியர்களைச் சற்று விலகியிருக்கச் சொல்லிவிட்டு, தொழில்நுட்பம் கல்விப்பணியைக் கையிலெடுக்கிறது. இது ஒன்றும் திடீர் மாற்றமில்லைதான். தொன்னூறுகளில் கல்விப் பணிகளில் கணினி பயன்படத் தொடங்கிய போதே இந்தச் சூழ்நிலை வெளித் தெரியாமல் கருக்கொண்டு விட்டது. இணையப் பயன்பாடு பரவலாகத் தொடங்கிய இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னர் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் கல்வியில் மேலோங்கியது.

ஆசிரியம் - கணேஷ் சுப்ரமணி

மாவீரன் அலெக்ஸாண்டருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் அவன் அளவுக்கு அதிகமாகவே வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தான். அதைக் கண்ட அனைவருக்கும் பெரும் வியப்பு. அவனிடம் கேட்டார்கள். 'இவ்வளவு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கு என்ன காரணம்? தந்øதாயானதில் உண்டாகும் இயல்பான உணர்வெழுச்சியா? இந்தப் பூமிக்கு மீண்டும் ஒரு மாவீரன் பிறந்து விட்டான் என்றா? நீ மிச்சம் வைத்த நாடுகளையும் வெற்றி கொள்ள ஒரு பேரரசன் பிறந்து விட்டான் என்றா?' என்றெல்லாம். அலெக்ஸாண்டர் சொன்னான்: 

கார்ப்பரேட் இந்தியாவில் கல்வி - கணேஷ் சுப்ரமணி

'கற்க கடன்வாங்கி கற்பவை கற்றபின்
விற்க நல்ல விலைக்கு'
இந்த அரைகுறை வெண்பாவைப் போலத்தான் இருக்கிறது இந்தியாவில் கல்வி. கல்விக்குக் கடன் கொடுக்க எல்லா வங்கிகளும் போட்டி போடுகின்றன. அப்படி கடன் கொடுத்து வழங்கப்படும் கல்வி யாருக்கானது?

பெண்களுக்குத் தனிக்கல்லூரி தேவையில்லை - கல்யாணி

கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாம் பகுதி

கே: டியூசன் எடுப்பதைப் பற்றி சொல்லுங்கள்.

தனியார் கல்வி தரமானதல்ல - கல்யாணி


கல்வியாளர் மற்றும் தாய்மொழிக்கல்விப் பேராளி கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடலின் இரண்டாம் பகுதி

கே: மெட்ரிக் பள்ளிகளில் படித்தால் மட்டுமே வளர்ச்சியடைய முடியும் என்ற நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையை அடைய தனியார் பள்ளிகள் என்னவெல்லாம் செய்தார்கள்?

தரமற்ற கல்வியின் அடையாளம் ஆங்கிலக்கல்வி - கல்யாணி


கல்வியாளர் கல்விமணி எனும் கல்யாணி அவர்களுடன் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய உரையாடல்

கே: மாற்றுக் கல்வி குறித்த உங்களின் செயல்பாடுகள் எப்படித் தொடங்கின?

ஒரு பள்ளிக்கூடத்தின் மரணம் - கணேஷ் சுப்ரமணி


கல்லறை அழைக்கும் 
கடைசிக் காலத்தில்
ஒவ்வொரு மனிதனும்
திரும்பிச் செல்ல ஏங்கும்

இடங்கள் இரண்டு.

இருட்டில் சமச்சீர்க் கல்வி - கணேஷ் சுப்ரமணி

முந்தைய தி.மு.க. அரசு செய்த உருப்படியான ஒன்றிரண்டு சாதனைகளுள் ஒன்று சமச்சீர்க்கல்வி. தமிழ்நாட்டில் ஏழை மாணவனுக்கு ஒரு விதமான கல்வி; பணக்கார மாணவனுக்கு வேறு விதமான கல்வி என்றிருக்கும் நிலை மாறுவதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவான சமச்சீர்க் கல்வி, தனியார் கல்வியை மையப்படுத்தி உருவாகியிருந்த அதிகார மையங்களை எரிச்சலைடைய வைத்தது.

கொலைவெறிக் குழந்தைகள்

சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியையாகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி, தன்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முகமது இர்பான் எனும் மாணவனால் வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குழந்தை வளர்ப்பின் சீர்கேட்டையும், இந்தியக் கல்விமுறையின் அவலத்தையும் அடையாளம் காட்டுவதாய் அமைந்துள்ளது.