சங்க காலத்துக்குச் சற்று பிந்தைய காலத்தில் தோன்றிய திருக்குறளில் எந்தவொரு கடவுட் கோட்பாட்டையும் வள்ளுவர் பின்பற்றவில்லை. எனவேதான் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவரும் அவரைத் தங்கள் சமயத்தவர் என்று உரிமை கோருகிறார்கள். அந்த அளவுக்கு சமயப் பொதுமையைப் பேணியுள்ளதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதுப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு.
திருக்குறளில் தெய்வம் - கணேஷ் சுப்ரமணி
ராசா மகன் - கணேஷ் சுப்ரமணி
தொன்னூறுகளில் தொடக்கத்தில்
இசையில் மெல்ல நிகழத் தொடங்கியிருந்த மாற்றங்கள் இசை ரசிகர்களுக்குத் தெரியும்.
இசை நவீனமாதலின் அடுத்த கட்ட நகர்வின் தேவை உருவாகியிருந்தது. தமிழ் சினிமாவில்
தனிப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்த இளையராஜாவும் இதை உணர்ந்திருந்தார்.
நவீனத் தொழில்நுட்பங்களைத் தன் இசையில் அவர் அறிமுகப்படுத்துவதும் கையாளுவதும்
அந்த மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளாக இருந்தன. ஆனால் ரகுமானின் அதிரடியான வரவு
இளையராஜா 50 - கணேஷ் சுப்ரமணி
அன்னக்கிளிக்கு வயது ஐம்பது. 1976ஆம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் ஐம்பதாண்டு கால இசைப்பயணம் இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தொலைதூரப் பயணங்களிலும், துயரங்களிலும், கொண்டாட்டங்களிலும், காதலுணர் பொழுதுகளிலும் இளையராஜா என்றும் தேவையானவராக இருக்கிறார்.
'அலைவாய்க் கரையில்' நாவலில் நெய்தல் நிலம்
டிராகன் - கணேஷ் சுப்ரமணி
கல்லூரியைக் களமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் அசலான கல்லூரி வாழ்க்கையை இவை தொட்டுக் கூட பார்ப்பதில்லை. எந்தக் கிரகத்திலும் இல்லாத கல்லூரிகள்தான் சினிமாவில் காட்டப்பட்டு வந்துள்ளன. அதிலும் நாற்பத்தைந்து வயதைக் கடந்த கதாநாயகர்களும் தலையில் விக்குடன் கல்லூரிக்குப் போகும் காட்சியைக் காணும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் நம் ரசிகர்கள். இப்போ சொல்ல வந்தது அதுவல்ல. சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற டிராகன் திரைப்படம் பற்றி.
தகவல் மாசுபாடு - கணேஷ் சுப்ரமணி
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தைத் தகவல் யுகம் என்கிறோம். ஒவ்வொரு நொடியும் நம் தேவைக்கும் அதிகமான தகவல்கள் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தகவல்களால் சூழப்பட்டு, தகவல்களால் ஆளப்பட்டு, தகவல்களாகவே மாறிக் கொண்டிருக்கிறோம். ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் நாம் பார்வையிடும் ஒரு விடயம், அடுத்த நொடி நாம் பயன்படுத்தும் அனைத்து செயலிகளிலும் நம் முன்னால் ஒளிர்கிறது. நம்முடைய விருப்பங்களும் சிந்தனைகளும் ஒரு சொடுக்கில் (click) தகவல்களாக மாறி நிறுவனங்களின் பயன்பாட்டுக்குச் சென்று நம்மிடம் திரும்பி வருகிறது. அதாவது யாரோ ஒருவரின் தேவைக்கான தகவல்களாக நாம் மாறுகிறோம்.
திகட்டத் திகட்ட வாழ்ந்தவர்களின் கதை - கணேஷ் சுப்ரமணி
90s kids என்றோர் இனமுண்டு. அதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அதற்குச் சற்று முன் வாழ்ந்த இன்னோர் இனமுண்டு. அதற்கு ‘90s teens’ என்று பெயர் வைக்கலாம். கிரேக்கப் புராணத்தில் வரும் சிசிபஸ், காரண காரியத் தொடர்பின்றி ஒரு பெரிய கல்லை மலைமேல் ஏற்றிச் செல்வதைப் போல பழைய நினைவுகள் எனும் தாங்க முடியாத பெரும் பாரத்தைச் சுமந்து திரிபவர்கள்தான் இந்த 90s teens. மாற்றம் ஒன்றே மாறாதது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்; எல்லாக் காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் கண்முன்னால் சகிக்க முடியாத வேகத்தில் நிகழும் மாற்றத்தைக் கண்டு உலர்ந்து போயிருக்கும் ஒரு தலைமுறை என்று இவர்களைச் சொல்லலாம்.
Subscribe to:
Posts (Atom)





